search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டப்பேரவையில் அறிவித்த முதல்வர்"

    காவிரி ஆணையத்தின் முதல் கூட்டத்திலேயே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெருமையுடன் அறிவித்தார். #CauveryIssue #EdappadiPalaniswami #CauveryManagementAuthority
    சென்னை:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடக மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    இக்கூட்டத்தில், தமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய  31 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு முறையாக திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

    இந்த தகவலை தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார். முதல் கூட்டத்திலேயே ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக அவர் கூறினார்.  #CauveryIssue #EdappadiPalaniswami #CauveryManagementAuthority
    ×